குண்டு வெடிப்புகள்
குமுறி வெடிக்கின்றன,
கூருகெட்ட மனிதத்தின்
குரூரத்தை நினைத்து…………..
மனித உடல்கள்
மரணஓலத்தில்
சிதறுகின்றபோது,
“சீ” யென துப்புகின்றன
சிற்றறிவு ஜீவராசிகள்……….
மனம்தான்
பதறுகின்றது,
மதமென்ன மதமென்று……………
இனமெல்லாம்
அழுகின்றது,
இதயமேது இங்கென்று…………..
தீவிரத்தின்
பசிக்கு,
தினக்கூலிகளா
உணவாகவேண்டும்……..
அப்பாவி
மக்களுக்கா,
அணுகுண்டுகளின்
அறிவிப்புகள் புரியும்…………
அடப்பாவிகளே,
அப்படியா
அழிக்கச்சொன்னான்
அறிவுகெட்ட ஆண்டவன்………..
@@@@