நான்
நதியாகும்போது=உன்னை
கரையாக்கிக்கொள்ள……………

நான்
குயிலாகும்போது=உன்னை
குரலாக்கிக்கொள்ள……………..

நான்
இரவாகும்போது=உன்னை
நிலவாக்கிக்கொள்ள……………….

அனுமதி
அன்பே=என்னை
அனுமதி………………..
********************************************************

உன்
மூச்சுவிடும் வெப்பத்தில்=நான்
சூடாகிக்கொள்ள…………….

உன்
பேச்சுவரும் வாக்கியத்தில்=நான்
வார்த்தையாகிக்கொள்ள…………….

உன்
வெட்கம்தொடும் நேரங்களில்=நான்
எல்லையாகிக்கொள்ள…………….

அனுமதி
அன்பே=என்னை
அனுமதி……………..
********************************************************

அதிகாலை
தென்றலால்=உன்னை
அபிசேகம் செய்ய………….

எழில்சோலை
பூக்களால்=உன்னை
எல்லோரா தீட்ட……………….

அந்திமாலை
அழகுகளில்=உன்னை
ஆழ்த்திநான் எடுக்க……………..

அனுமதி
அன்பே=என்னை
அனுமதி…………….
********************************************************

காதோரம்
ரகசியமாய்=சில
கவிதைகளை சொல்ல……………

இதழ்சிந்தும்
தேன்துளியை=நான்
பருகிக்கொள்ள…………

உன்வடிவ
மதுக்குவளையை=நான்
உரசி மயங்க………………

அனுமதி
அன்பே=என்னை
அனுமதி……………..
**********************************************************

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book