நான்
நதியாகும்போது=உன்னை
கரையாக்கிக்கொள்ள……………
நான்
குயிலாகும்போது=உன்னை
குரலாக்கிக்கொள்ள……………..
நான்
இரவாகும்போது=உன்னை
நிலவாக்கிக்கொள்ள……………….
அனுமதி
அன்பே=என்னை
அனுமதி………………..
********************************************************
உன்
மூச்சுவிடும் வெப்பத்தில்=நான்
சூடாகிக்கொள்ள…………….
உன்
பேச்சுவரும் வாக்கியத்தில்=நான்
வார்த்தையாகிக்கொள்ள…………….
உன்
வெட்கம்தொடும் நேரங்களில்=நான்
எல்லையாகிக்கொள்ள…………….
அனுமதி
அன்பே=என்னை
அனுமதி……………..
********************************************************
அதிகாலை
தென்றலால்=உன்னை
அபிசேகம் செய்ய………….
எழில்சோலை
பூக்களால்=உன்னை
எல்லோரா தீட்ட……………….
அந்திமாலை
அழகுகளில்=உன்னை
ஆழ்த்திநான் எடுக்க……………..
அனுமதி
அன்பே=என்னை
அனுமதி…………….
********************************************************
காதோரம்
ரகசியமாய்=சில
கவிதைகளை சொல்ல……………
இதழ்சிந்தும்
தேன்துளியை=நான்
பருகிக்கொள்ள…………
உன்வடிவ
மதுக்குவளையை=நான்
உரசி மயங்க………………
அனுமதி
அன்பே=என்னை
அனுமதி……………..
**********************************************************