எத்துனை நாள்

தாங்கிடுவாய் = நம்

எல்லா துன்பம்
சுமந்திடுவாய்…….

 

 

இத்துனைநாள்
பொறுத்தவளே =இன்னும்
இருவருடம்
பொறுத்துவிடு……..

 

 

ஏர்பிடிக்க
அனுப்பாமல் = என்னை
ஏடுபிரிக்க
அனுச்சவளே……….

 

 

ஏக்கத்தோடு

படிக்கின்றேன் = நீ

எப்போதுமே

பயத்தவிடு……….

 

கைகட்டி
நின்னதெல்லாம் = இனி
கண்டிப்பா
நொருக்கிடுவேன்……….

கடன்பத்தி
திகைக்காத = நான்
கரைசேர்ந்தா
திருப்பிடுவேன்……….

மத்தவங்க

சொல்வதெல்லாம்=நான்

மாத்திகாட்டிடுவேன்……

பெத்தவங்க

உங்களுக்கு=நான்

பெருமயசேத்திடுவேன்…..

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book