மழை விழும்
நேரம்=நாம்
ஜன்னலின்
ஓரம்………..

துருபித்த
கம்பிகள்=உன்
கரம்பிடித்ததால்,

மதுகுடித்த
மனிதன்போல்=சற்றே
மயங்கிக் கிடந்தன……….

திடீரென
தீண்டின=நம்மை
திரலொளி மின்னல்கள்………

கலக்கத்தில்
கட்டியனைக்கும் வேகத்தில்=நீ
கைகளால் முகம்மூடினாய்………….

ஒவ்வொரு
முத்தத்தின் முடிவிலும்=நாம்
மெதுவாய் இமைதிறப்பதுபோல,

நீ
முகம் திறந்து=உன்
பயம் விரட்டினாய்…………..

மஞ்சள்குளித்த
மறுநிமிடம்போல்=உன்
கைகளும், முகமும்
கம்பித்துகள் பூசியிருந்தன……..

முகம்துடைக்க=உன்
முந்தானையிடம்
முன்மொழிந்தேன்…………

உன்
முந்தானை
இடம்பெயர்ந்ததில்,

என்
முத்தங்கள்=தங்கள்
முடிச்சுகளை
அறுத்துகொண்டு,

உன்
உடலின் செழுமையை
முழுமையாய்
மேய்ந்தன………………

சாரல்துளிகள்
ஜன்னலில்
பார்ப்பதை=ஏனோ
மறந்துவிட்டோம்…………

முதல்
கலவிபோல்=நாம்
முழுபலத்துடன்
முண்டியடித்துக்கொண்டோம்………..

ஏனோ
எப்போதும் இல்லாமல்=நீ
அப்போதுமட்டும்
ஆறுக்கும் அதிகமாய்
பற்குறிகளிட்டாய்……………

நீ
பயந்து பயந்து
என்னை
தொடுபவள்,

ஏனோ
பாய்ந்து,பாய்ந்து
என்னைபற்றிக்கொண்டாய்…………….

இல்லறத்தில்
இருந்த
இருபதாண்டுகளில்=நீ
இப்போதுதான்
இருக்கமாய் அணைக்கின்றாய்…………..

ஜன்னல்வரும்
இடியோசையை தாண்டி=நாம்
இருக்கமாய்
தழுவிக்கொண்டிருந்தோம்……………….

ஆம்!
அன்பே=நான்
இந்தமுறை மட்டுமல்ல,

இனி எப்போதும்
உன்னைவிட்டு
வெளிநாடு
செல்வதாய் இல்லை…………..
======================

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book