மழை விழும்
நேரம்=நாம்
ஜன்னலின்
ஓரம்………..
துருபித்த
கம்பிகள்=உன்
கரம்பிடித்ததால்,
மதுகுடித்த
மனிதன்போல்=சற்றே
மயங்கிக் கிடந்தன……….
திடீரென
தீண்டின=நம்மை
திரலொளி மின்னல்கள்………
கலக்கத்தில்
கட்டியனைக்கும் வேகத்தில்=நீ
கைகளால் முகம்மூடினாய்………….
ஒவ்வொரு
முத்தத்தின் முடிவிலும்=நாம்
மெதுவாய் இமைதிறப்பதுபோல,
நீ
முகம் திறந்து=உன்
பயம் விரட்டினாய்…………..
மஞ்சள்குளித்த
மறுநிமிடம்போல்=உன்
கைகளும், முகமும்
கம்பித்துகள் பூசியிருந்தன……..
முகம்துடைக்க=உன்
முந்தானையிடம்
முன்மொழிந்தேன்…………
உன்
முந்தானை
இடம்பெயர்ந்ததில்,
என்
முத்தங்கள்=தங்கள்
முடிச்சுகளை
அறுத்துகொண்டு,
உன்
உடலின் செழுமையை
முழுமையாய்
மேய்ந்தன………………
சாரல்துளிகள்
ஜன்னலில்
பார்ப்பதை=ஏனோ
மறந்துவிட்டோம்…………
முதல்
கலவிபோல்=நாம்
முழுபலத்துடன்
முண்டியடித்துக்கொண்டோம்………..
ஏனோ
எப்போதும் இல்லாமல்=நீ
அப்போதுமட்டும்
ஆறுக்கும் அதிகமாய்
பற்குறிகளிட்டாய்……………
நீ
பயந்து பயந்து
என்னை
தொடுபவள்,
ஏனோ
பாய்ந்து,பாய்ந்து
என்னைபற்றிக்கொண்டாய்…………….
இல்லறத்தில்
இருந்த
இருபதாண்டுகளில்=நீ
இப்போதுதான்
இருக்கமாய் அணைக்கின்றாய்…………..
ஜன்னல்வரும்
இடியோசையை தாண்டி=நாம்
இருக்கமாய்
தழுவிக்கொண்டிருந்தோம்……………….
ஆம்!
அன்பே=நான்
இந்தமுறை மட்டுமல்ல,
இனி எப்போதும்
உன்னைவிட்டு
வெளிநாடு
செல்வதாய் இல்லை…………..
======================