பூவைத்த பூவே
நான்
சூடலாமா…..
புவிவந்த நிலவே
நான்
தீண்டலாமா……
பொட்டுவைத்த பொட்டே
நான்
நெற்றியிடலாமா………
பொன்செய்த மொட்டே
நான்
பொத்தலாமா………….
அன்பான அமுதே
நான்
அழுக்கு செய்யலாமா…………
அத்தைபெத்த சொத்தே
நான்
அள்ளிபோகலாமா………………
உனக்கு
செந்தூரம்
சேமிக்கின்றேன்………
உனக்கு
செந்தாழம்
செடிவளர்க்கின்றேன்………..
உன்னை
கொஞ்சும் நாளுக்காய்
இமைமூடிகிடக்கின்றேன்…..,,
=====================