கவிதை நடையில்
எழுதிய
கடிதங்கள்………..
கடித நடையில்
எழுதிய
கவிதைகள்………..
அன்பாய்
செய்த
அலைகழிப்புகள்…………
இனிதாய்
உமிழ்ந்த
வசைபாடுகள்…………
செல்லமாய்
கிள்ளிய
வலிகள்…………………..
திட்டமிட்டு
பெற்ற
தோல்விகள்……………
அமைதியாக்கிய
உந்தன்
பேச்சுகள்…………….
எல்லாம்
எங்கே
சென்றுவிட்டன??
நீதான்
ஏமாற்றினாய்,
இவைகளுமா?
==============