எந்த பூவாய்
எங்கே பூத்தாய்=ஏன்
என்னை மட்டும்
ஏங்க சபித்தாய்……………
எந்த ஊரில்
எழிலாய் நிலைத்தாய்=ஏன்
ஏழை என்னை
எரிதழலில் விதைத்தாய்……….
முல்லை கொடியே
முகமெங்கே மறைத்தாய்=என்
மூச்சை திருடியேன்
முந்தானையில் முடித்தாய்……….
மஞ்சள் பூவே
மாமன் மகளே
மறுபடி=எப்போது
பார்த்திடுவோம்?
நிலவின் நிலவே
நீங்கா உறவே
நின்மடி=எப்போது
சேர்ந்திடுவேன்………..
=================