செடிகொடிகள் காய்த்துவிட்டால்

காத்திருப்பதில்லை =ஏழை

பெண்மையிங்கே பூத்துவிட்டால்

மாலையாவதில்லை………….

விலங்கினங்கள் பூப்பெய்தி

புழுங்கிசாவதில்லை =இந்த

மனிதனைப்போல் காசுபார்த்து

காதல்செய்வதில்லை……………

கற்புநெறி கண்டுயாரும்

துணையை தேடவில்லை =மனம்

முதிர்கன்னி முகம்பார்த்தால்

மூச்சுவிடுவதில்லை……………..

மொழியறியா பறவைகூட

உணர்ச்சி விடுவதில்லை = இந்த

விதியறியா சமூகமோ

உணர்ந்து கொள்வதில்லை…………

வயதான கன்னியர்கள்

வாய் திறப்பதில்லை = மனித

வாய்கொண்ட நாவுதனில்

மாட்டிக் கொள்வதில்லை………….

முத்தசத்தம் கேட்கும்போதும்

நாணம் விடுவதில்லை = அன்னி

முனகலிட்டு கூவும்போதும்

காதில் நுழைப்பதில்லை…………..

கனவுவந்து காயம்செய்தும்

கண்டு கொள்வதில்லை = இந்த

கன்னியர்கள் காய்த்தபோதே

கன்னி கழிவதில்லை……………..

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book