தம்பியுடையான்
படைக்கு அஞ்சான் =உயிரே
உன்னையுடையான்
எதற்கும் அஞ்சான்………..

என்றுதானே
எண்ணியிருந்தேன் =உயிரே
எதற்கும்
துணிந்திருந்தேன்………….

இனியுன்னை,
எப்போது பார்ப்பேனடா =உயிரே
நான்,
எவ்வாறு இருப்பேனடா……………

வயது
சிறுத்தவனே =நீ
வாழ்வில்
பெருத்தவண்டா…..
அன்பை
படித்தவனே =நீ
அழகு
கொழுத்தவண்டா……………….

நீ
ஆடுகின்ற
ஆட்டமெங்கே………….?

நீ
பாடுகின்ற
பாட்டுயெங்கே………………..?

உனக்காக
ஆடிபாட =உயிரே
எங்களுக்கு
விதித்ததிங்கே……………

நீ
கண்ணுறங்கும்
கருப்பு நிலா……….
என்
கண்ணிருந்த
கருத்து நிலா…………….

நீ
எண்ணிருந்த
ஏக்கமெல்லாம்,

வரும்
தூக்கமின்றி
வீதியுலா……………..

ஏக்கம்
பொறுத்துவிடு =உயிரே
தூக்கம்
துறந்துவிடு……………

நானும்
வரும்வரைக்கும் =நீ
எனக்காய்
காத்துயிரு………….

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book