#####காகம் வந்து சொல்லலையோ???#####

காலைமுதல்
#####நிற்கின்றேன் =உனக்கு
காத்திருந்து
#####தவிக்கின்றேன்………..

காணவரச்
#####சொன்னேனே =அந்த
காகம்வந்து
#####சொல்லலையோ………

நெருப்புபோல
#####கொதிக்கின்றேன் =நான்
நெடுநாளாய்
#####இளைக்கின்றேன்………

நேற்றேவரச்
#####சொன்னேனே =அந்த
நெல்வயல்கள்
#####சொல்லலையோ……….

வாய்க்காமோட்டு
#####மூலமரம் =நீ
வந்துபோனா
#####மொரைக்குதாமே……..

பொண்டாட்டி
#####வருவான்னு =நீ
போகும்போது
#####சொல்லிவையி………..

ஆலகர தோப்புகுள்ள
#####அடிமரத்து ஆந்தவொன்னு = நீ
அந்தபக்கம் போகையில
#####அலறிஅலறி பறக்குதாமே……….

அடங்காத பொண்ணுவொன்னு
#####அடியாளா வருவான்னு =நீ
ஆந்தகிட்ட அப்பப்ப
#####அலராம இருக்கசொல்லு………

முனியன் பொண்டாட்டி
#####செத்தயிடம் வந்தாக்க=நீ
மறக்காம சொல்லிவிடு=அவ
#####முனியிலும் மோசமுன்னு…..

வரப்புமேல நீநடந்தா
#####பாம்பெதுவும் வாராது=நான்
வரும்போதே சொல்லிபுட்டேன்
#####வந்துபோனா சொல்லிபுடு……….

பம்புசெட்டு கொட்டகையில்=நீ
#####பழையவேட்டி
வச்சிருந்த=நான்
#####வந்தப்ப எடுத்துகிட்டேன்,

வையாத………….
தேடாத……………..

கட்டபுலி
#####மரத்துகிட்ட=நான்
காலைமுதல்
#####காத்திருக்கேன்,

காணவரச்
#####சொன்னேனே=அந்த
காகம் வந்து
#####சொல்லலையோ……….

@@@@@@@@@@@@@@@@@

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book