கண்களுக்கு மையிட்டு
கால்களுக்கு செருப்பிட்டு
கைகளுக்கு வலையளிட்டு
கார்குழலில் பூக்களிட்டு……
நெற்றிக்கு பொட்டிட்டு
நெஞ்சுக்கு பட்டிட்டு
நெனப்புக்கு யெனையிட்டு
நெடுந்தூரம் வந்தவளே……….
ஆசைக்கு அணையிட்டு
ஆண்மைக்கு திரையிட்டு
அணைப்புக்கு உனைவிட்டு
அரளிப்பூ ஆனேனடி………..
எருக்குப்பூ தலைவெடித்து
ஏதேதோ நிலையெடுத்து
என்னுயிரே தடைவிதித்து
எட்டியாகி போனேனடி………..
அன்னைசொன்ன வாக்குகேட்டு
அத்தைமாமன் கண்ணில்பட்டு
அத்தைமகளும் ஆசைபட்டு
அய்யய்யோ என்னசெய்ய………..
கொஞ்சிபேசி காதல்பட்டு
கொள்ளைபுறமாய் ஊடல்பட்டு
கொழுந்தேயுன்னை வீசிவிட்டு
கொடுமைசெய்யேன் காத்திருப்பாய்…………
================================