நேர்கொண்டு
புறப்படு
நெருப்பினை
புறட்டிடு=நீ
நெறிபிடித்த
துப்பாக்கி…………..

சீர்கொண்டு

எழுந்திடு

சிகரம்யொன்றை
எழுப்பிடு=நீ
சிறுமையொடிக்கும்
சுயகாக்கி……………….

மனிதம்
உயிர்விட்டால்
மல்லாந்து
உறங்காதே=நீ
மனிதகுல
வழிகாட்டி……………

நிதமும்
கிழிபட்டால்
நீயொன்றும்
கலங்காதே=நீ
நெருப்புகக்கும்
நாள்காட்டி……………

கொடுமைகள்

தலைநிமிர்ந்தால்

கொஞ்சமும்

தயங்காதே=நீ

கொள்கையெடுத்த

கோடரி……….

வேதங்கள்

வலைவிரித்தால்

வெல்லும்வரை

வேட்டையாடு=நீ

வெறிபிடித்த

கொடும்புலி………..

==================

 

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book