நான்
நல்லா இருந்துருப்பேன்,
படிச்சி தொலைக்கலனா……….

நான்
பலமா இருந்திருப்பேன்
பள்ளி போகலனா……………..

நாலுமனி
படிப்பென்னை
நாசமா ஆக்கிடிச்சு………….

கண்விழிச்சி
படிச்சதெல்லாம்
கனவாவே போயிடுச்சி…………

எட்டாவது
படிச்சவனெல்லாம்
எட்டாத உயரத்துல,
பட்டம்
படிச்சுபுட்டு
பாழா போயிட்டேனே…

வேல கெடைக்காம
வெளங்காம
கெடக்கேனே………………..

கேட்ட வேலயெல்லம்
கெடைக்காம
கெட்டேனே…………..

நாட்ட
நெனச்சிகிட்டு
நானாவே சிரிச்சேனே……….

ஊட்ட
பாத்துபுட்டு
ஊமையாகி படுத்தேனே……….

படிச்ச
புள்ளன்னு
பாசம் பொழிஞ்சவங்க,

பைத்தியம்
வருதுன்னு
பைத்தாரம் பன்னுறாங்க………….

மார்க்கு
அதிகமுன்னு
மானசார சொன்னவங்க,

கெராக்கு
பையன்னு
கிண்டலா பேசுராங்க………

வாழ
வழியில்ல
வாய்க்கும் அரிசியில்ல,

நான்
படிச்ச படிப்பே
படுத்தா
நல்ல தூக்கமில்ல…………

கூலி
வேலைக்கும்,
கூப்பிட ஆளில்ல……..

கிழிஞ்ச
சட்டைக்கும்
சோப்புக்கு காசில்ல……………

படிப்பு
படிப்புன்னு=நான்
நாசமா
போன புள்ள……………

நான்
படிச்ச படிப்பே
ஒனக்கும் வெக்கமில்ல……….

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book