தூரமாய் துரமாய்
*************இருக்கின்றோம் =நாம்
துரும்பிலும் சிறியதாய்
****************இளைக்கின்றோம்…………
மேகமாய் நினைவுகள்
**********பொழிகின்றோம் =நாம்
மெல்லிய காகிதமாய்
**************பெயர்கின்றோம்……………
நெருக்கமாய் நெஞ்சத்தில்
*************வாழ்கின்றோம் =நாம்
நெடுநாளாய் நமக்குள்ளே
**************வீழ்கின்றோம்…………..
இரவுக்கு தூக்கத்தை
*************கொடுத்திட்டோம் =நாம்
இருவருமாய் இன்பமாக
****************கொலைபட்டோம்…………
உயிருக்கு உயிரென்று
***********கூடிட்டோம் =நாம்
உதிரத்தில் உயர்காதல்
**************கூட்டிட்டோம்…………
அகிலத்தில் காதலராய்
***********வளர்ந்திட்டோம் =நாம்
அனைவர்முன் கைசேர்த்து
*************வாழ்வேர்ப்போம்……………
தனித்தனியாய் இப்போது
************சிறைபட்டோம் =நாம்
தத்தளித்து போனதில்தான்
***************சீர்பெற்றோம்…………….