எழிலுன்னை
நினைத்துவிட்டால்=என்
எழுதுகோலும்
எழுதவில்லை………….

கவியுன்னை
பிரிந்துவிட்டால்=உடல்
உயிரிருந்தும்
நடக்கவில்லை………….

நெரிப்பிலிட்ட
சிறுபூவாய்=என்
நெஞ்சழுது
துடிக்கிறது……………

புயலிடையே
இளவம்பஞ்சாய்=என்
புலமையெல்லாம்
தவிக்கிறது……..

நீறெடுக்க
வருவாயா=நான்
குளக்கரையில்
கிடக்கின்றேன்…………….

நீகுளிக்கும்
கரைதேடி=நான்
சிறுநூலாய்
இளைக்கின்றேன்……………

நீசுவாசித்த
காற்றனுப்பு=நான்
நுரையீரல்
வெடிக்கின்றேன்…………

நீகால்வைத்த
மண்ணனுப்பு=நான்
கரைசேர்ந்து பறக்கின்றேன்………….

எப்போது
தூதனுப்பு=நான்
உனைகேட்டு
வருகின்றேன்…………….

நொடிபொழுதும்
கடத்தாதே=நான்
நோய்பட்டு
இறக்கின்றேன்………..
==================

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book