எழிலுன்னை
நினைத்துவிட்டால்=என்
எழுதுகோலும்
எழுதவில்லை………….
கவியுன்னை
பிரிந்துவிட்டால்=உடல்
உயிரிருந்தும்
நடக்கவில்லை………….
நெரிப்பிலிட்ட
சிறுபூவாய்=என்
நெஞ்சழுது
துடிக்கிறது……………
புயலிடையே
இளவம்பஞ்சாய்=என்
புலமையெல்லாம்
தவிக்கிறது……..
நீறெடுக்க
வருவாயா=நான்
குளக்கரையில்
கிடக்கின்றேன்…………….
நீகுளிக்கும்
கரைதேடி=நான்
சிறுநூலாய்
இளைக்கின்றேன்……………
நீசுவாசித்த
காற்றனுப்பு=நான்
நுரையீரல்
வெடிக்கின்றேன்…………
நீகால்வைத்த
மண்ணனுப்பு=நான்
கரைசேர்ந்து பறக்கின்றேன்………….
எப்போது
தூதனுப்பு=நான்
உனைகேட்டு
வருகின்றேன்…………….
நொடிபொழுதும்
கடத்தாதே=நான்
நோய்பட்டு
இறக்கின்றேன்………..
==================