ஆண்டாண்டு காலமாய் கல்வியின் வாசனையற்ற குடியில் பிறந்து, முதல் முதலாக பள்ளிசெல்லும் வாய்ப்பினை பெற்ற எனக்கு கற்றலின் பயனையும், கற்கின்ற முறையையும் கற்றுகொடுத்து என்னையும் இந்த உலகின் கல்விபெற்றோர் பட்டியலில் இணைத்துக்கொள்ள உதவிய என் மேலான ஆசிரியர்கள்
திருமதி.சந்திரா (என் முதல்நாள் பள்ளி ஆசிரியர்)
திருமதி.பூங்காவணம் (என் முதல் வகுப்பு ஆசிரியர்)
திருமதி.அமிர்தம் (என் இரண்டாம் வகுப்பு ஆசிரியர்)
திருமதி.விஜயதரணி (என்னை கவிஞனாக்கிய ஆசிரியர்)
திருமதி.செங்கொடி ( என்னை மனிதனாக்கிய ஆசிரியர்)
திரு.மனோகரன் (என் வெளியுலகை அறிமுகம் செய்த ஆசிரியர்)
திரு.குமார் (எனக்கு ஆளுமைகளை கற்றுகொடுத்த ஆசிரியர்)
ஆகியோர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,அவர்களின் பொற்பாதங்களுக்கு இந்த கவிதை நூலினை சமர்பிக்கின்றேன்.
இவண்.
சடையன் பெயரன்.